சாலையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்

Update: 2023-03-05 15:58 GMT

கம்பம் 15-வது வார்டு சாவடி தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டன. அப்போது கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் சாலையோரத்திலேயே கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்