கோவை ஆவாரம்பாளையம் 28-வது வார்டு பட்டலம்மன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டு, சாலையில் போட்டு வைக்கப்படுகிறது. இதனால் அங்கு குடியிருந்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் கழிவுகளை அள்ளினால், உடனடியாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.