சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 10:57 GMT

மயிலாடுதுறை நகர் பகுதியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் எதிரே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஆஸ்பத்திரி பகுதியை சூழ்ந்து கொள்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்