சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 07:41 GMT

 குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட வெட்டுவெந்நி சந்திப்பில் இருந்து சப்பாத்து பாலம் செல்லும் சாலையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக பராமரிக்கப்படாமல் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கா.வினுகுமார்,மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்