குடியிருப்பில் புகும் கழிவுநீர்

Update: 2023-02-22 11:43 GMT

திருச்சி அண்ணாநகர் தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில்  அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. மேலும் இந்த கழிவுநீர் குடிநீருடன் கலந்து கலங்கலான தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்