பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரிய உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.