நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-02-08 13:35 GMT

திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுபாறை புத்தடிமாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருவதுடன், இரவு நேரத்தில் இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்