மரத்தடிகள் அகற்றப்படுமா

Update: 2023-02-08 09:39 GMT
வடிகாலில் வைக்கப்பட்டுள்ள மரத்தடிகள் அகற்றப்படுமா

பேச்சிப்பாறை அருகே சேனங்கோடு பகுதியில் பேச்சிப்பாறை ஊராட்சி சார்பில் சாலையோரத்தில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இந்த வடிகாலின் மேல் பகுதியில் தனி நபர்கள் மரத்தடிகளை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் சேதமடைந்து வருகிறது. எனவே பேச்சிப்பாறை ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மரத்தடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜான்ரோஸ்
பேச்சிப்பாறை





மேலும் செய்திகள்