பல்லாங்குழி சாலையால் அவதி

Update: 2023-02-05 18:29 GMT

கடலூர் பாதிரிக்குப்பம் சாலை பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பல்லாங்குழி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்