சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-02-01 12:24 GMT

திருச்செந்தூர் சன்னதி தெருவில் அடிக்கடி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் கோவிலுக்கு பால்குடம் எடுத்தும், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்