நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-01-29 12:33 GMT

அரியலூர் மருத்துவமனை சாலை முருகன் வால்பட்டறை பின்புறம் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட காலமாக சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறு பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி பன்றிகள் மேய்ந்து வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்