சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர்

Update: 2023-01-29 11:23 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் பகுதி நீடூர் மெயின் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். கடுமையான துர்நாற்றம் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்