தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 17:19 GMT

தேனி அருகே சின்னஓவுலாபுரம் ஏ.டி.காலனியில் சாக்கடை கால்வாய் பணிக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம்சுழித்தப்படியே அந்த தெருவை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்