திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்காலானது நகராட்சி அலுவலகம் பின்புறம் வழியாக சென்று ஜீவாநகர் கடலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, வாய்க்காலை தூர்வாரவும், கழிவுநீர் தேங்காதவாறு வழிந்தோடும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.