நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2023-01-25 12:13 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் கோவில் தெரு மற்றும் பகவதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், சாலையோரம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களின் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்