தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-01-25 09:34 GMT

கல்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லன்விளையில் ஏராளமான வீடுகள் உள்ளன. சில வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தெருக்களில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த கழிவுநீர் அருகில் ஓடும் வள்ளியாற்றில் கலக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோலப்பன், கொல்லன்விளை.

மேலும் செய்திகள்