சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-01-22 11:19 GMT
கரூர் மாவட்டம், சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் மற்றும் செல்வநகர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் இந்த சுகாதார வளாகத்தில் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு பழுதடைந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது .இதன் காரணமாக சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் பூட்டி விட்டனர். இந்நிலையில் இதுவரை சுகாதார வளாகத்தை சீரமைத்து திறக்கப்படவில்லை. இந்த பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் இந்த சுகாதார வளாகத்தின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்