கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-11 13:19 GMT
கோவை பீளமேடு அருகே கருப்பண்ண கவுடர் வீதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாத நிலை உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்