தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-01-08 11:57 GMT

மயிலாடுதுறை மாவட்டம் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆவையாம்பாள்புரம் தெரு உள்ளது. இந்த தெருவில் கழிவுநீர் வடிகால் இல்லை. இதன்காரணமாக தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும், குப்பைகளும் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்