புதர்மண்டி கிடக்கும் கால்வாய்

Update: 2023-01-01 13:37 GMT

நாகை ஆஸ்பத்திரி சாலை அண்ணாசிலை எதிரே மீன்மார்க்கெட் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதன்காரணமாக கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

.


மேலும் செய்திகள்