கடும் துர்நாற்றம்

Update: 2023-01-01 07:35 GMT

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 7-வது வார்டில் மணியம்மை வீதி, ஏர்பதி நகர், சக்தி விநாயகர் கணபதி லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் இ்ல்லை. இதனால் சாலையோரம் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை காணப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்