விருதுநகர் வட்டம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் முறையான கழிவுநீர் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு துர்நாற்றமும் கொசு தொல்லையால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே முறையான வாருகால் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.