தேங்கிநிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-28 09:39 GMT

திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீட்டுக்கு மற்றும் கடையிலிருந்து வெளியேறக்கூடிய கழிவுகள் மூலக்கடை அருகில் தேக்கமடைகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு தோற்று நோய் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. விரைவாக மாநகராட்சி நிர்வாகம் தேக்கமடைந்து வரும் சாக்கடை கழிவுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி சென்ற போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


-------------

மேலும் செய்திகள்