திறந்து கிடக்கும் சாக்கடை

Update: 2022-12-28 06:34 GMT


ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலம் 21-வது வார்டு மாணிக்கம் பாளையம் ஹவுசிங்யூனிட் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் உள்ளது. அருகே பள்ளிக்கூடம் மற்றும் மசூதி உள்ளது. அதனால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இந்த ரோட்டில் அடிக்கடி சென்று வருகிறார்கள். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி மாநகராட்சி அதிகாரிகள் உடனே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைக்கு மூடிபோடவேண்டும்.



மேலும் செய்திகள்