செய்தி எதிரொலி

Update: 2022-12-25 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே இருந்த வாருகால் கான்கிரீட் தள மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சேதமடைந்த தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்