பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-25 13:34 GMT

மயிலாடுதுறை தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பொறையாறு, காரைக்கால் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மூக்கை மூடிய படி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்