திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை

Update: 2022-12-25 12:20 GMT
திருச்சி மாவட்டம், கிராப்பட்டி முஸ்லிம் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் எனும் பெயரில் சாக்கடைகளை திறந்து வைத்துவிட்டு எவ்விதமான பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் சுமார் 5-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுந்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்