வெளியேறும் கழிவுநீரால் அவதி

Update: 2022-12-18 12:09 GMT

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட செந்துறை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு கல்லூரி மாணவிகள் விடுதி இவை அனைத்துக்கும் நுழைவாயிலாக உள்ள இடத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஒரு மாதமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசு கல்லூரி விடுதிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், விளையாட்டு அரங்கிற்கு வரும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்