விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள வாருகாலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் அருகில் அரசு பள்ளியும், மாணவர்கள் விடுதியும் உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வாருகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.