சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2022-12-14 12:05 GMT

புதுக்கோட்டை தாஜ்மஹால் பள்ளிவாசல் அருகே சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் இந்த கழிவுநீரில் பெரிதும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்