சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-12-11 15:03 GMT

ராமநாதபுரம் நகராட்சி 1-வது வார்டு கோட்டைமேடு தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நடக்க பாதையின்றி பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகள் தேங்கிய கழிவுநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்