நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-11 14:33 GMT

அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்