கால்வாயில் முளைத்துள்ள செடி-கொடிகள்

Update: 2022-12-11 12:25 GMT

கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் அந்த வழியாக உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் இந்த உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக இந்த உபரி நீர் கால்வாய் நெடுகிலும் பல்வேறு வகையான செடி, கொடிகள் கால்வாயில் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக செல்லும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்