தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-11 12:23 GMT
கரூர் மாவட்டம், கட்டிபாளையத்தில் இருந்து கரைப்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் அந்த பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் வெளியேறும் வகையில் அந்த பகுதியில் கால்வாய் வெட்டப்படாததால் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தார் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே உள்ளாட்சிதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தங்குதடையின்றி செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்