தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-11 12:23 GMT
திருச்சி தெற்கு காட்டூர் பாரதியார் தெரு, பர்மா காலனி, பெல் கூட்டுறவு வங்கி, பரம ஹம்ஸா பெல் பள்ளிக்கூடம் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், இப்பகுதியில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது கழிவுநீர் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்