தேங்கியுள்ள கழிவுநீர்

Update: 2022-12-07 15:42 GMT
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் புள்ளம்பாடி செல்லும் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இதன் அருகே அப்பகுதியில் வசிக்கும் வீடுகளில் இருந்து கழிவுநீர் வருகிறது. அது சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஊட்டத்தூர், புள்ளம்பாடி செல்லும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதுடன், தேங்கியுள்ள கழிவு நீரையும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்