சிவகங்கை நகராட்சி வார்டு -6 பவுண்டு தெரு சாலையில் பைப் உடைந்த நிலையில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் வெளிவருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அவதிப்படுவதுடன் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே குழாய் உடைப்பினை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.