தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-12-04 11:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்