கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-30 16:40 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்திராம்பட்டு கிழக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீரை அகற்றுவதோடு அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்