மூடப்படாத வாய்க்கால்

Update: 2022-11-27 12:00 GMT

திருச்சி மாநகராட்சி 51-வது வார்டு மூலைக்கொல்லை தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளதால் சாலையோரம் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வாய்க்கால் ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு இருந்தவர் தவறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். ஆனால் இதுவரை வாய்க்காலை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்