தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-27 09:22 GMT
கடலூர் முதுநகர் சுன்னாம்பு கார தெரு சேர்கான் காேரி சந்து பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கபடவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆறாக வழிந்தோடுகிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்