சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-23 14:27 GMT

மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இவை சாலையின் ஓரத்தில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அய்யங்குட்டையிலும் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்