பொதுகழிவறை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-23 12:38 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் காரப்பிடாகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வடக்கு அய்யனார் கோவில் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுகழிவறை ஒன்று உள்ளது. தற்போது இந்த கழிவறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பொதுகழிவறை சேதமடைந்து காணப்படுவதால் ஒரு சிலர் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்கழிவறையை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்