வடிகால் வசதி அமைக்கப்படுமா?

Update: 2022-11-20 16:16 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புளியம்பட்டி கிராமத்தில் தோப்புக்காலனி 1-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் சாலையில் செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்த பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்