கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையில் தேங்குகிறது

Update: 2022-11-20 14:04 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஆழ்வார் தீர்த்த குளக்கரை தெருவில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது.இதனால் பகுதி வழியே நடந்து செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்