தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 13:20 GMT

திருச்சி மாநகராட்சி வார்டு எண்-49 சுப்பையா தெரு விஸ்தரிப்பில் உள்ள நாகம்மை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாக்கடை தேங்கி நிற்கிறது. இதனால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்