சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-20 10:01 GMT

நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு நாகை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிாிவு அலுவலகம் அருகே கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர்தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்