தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-11-13 13:00 GMT
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு சணப்பிரட்டி ஆர்.எஸ்.புதூர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது பெய்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்