வாகன ஓட்டிகள் மீது விழும் கழிவுநீர்

Update: 2022-11-13 12:58 GMT
திருச்சி மாநகராட்சி 52-வது வார்டு மேலப்புதூரில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தண்டவாளப்பகுதியில் இருந்து சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இருச்சர வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் கசிந்து விழுந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்