ரோட்டில் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-11-13 05:08 GMT

எலவமலை ஊராட்சி பெரியார் நகர் மணல் ஆபிஸ் வீதியில் சாக்கடை கழிவு நீர் தெருவில் ஓடிக்கொண்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் அங்கு ரோடு போடுவதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு எந்த பணியும் நடைபெறாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. தார் ரோடும் போடாமல், சாக்கடை கால்வாயும் கட்டாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ரோடு போடுவதுடன், சாக்கடை கால்வாயும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்